2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஒற்றைக்காலில் நிற்கிறார் சஜித்

Editorial   / 2021 மே 23 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, “ தனக்கு கொரோனா தொற்றினாலும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன்’ எனத் தெரிவித்திருந்திருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்திருந்த அவர், “தடுப்பூசிகளை ஏற்றும்போது ஒரு பட்டியல் இருக்கவேண்டும். முதலாவதாக சுகாதார பிரிவினர், அவர்களுக்கு உதவும் பாதுகாப்பு தரப்பினர், வயதானவர்கள் என்றடிப்படையில் முன்னுரிமை பட்டியல் உள்ளது. ஆகையால், தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என தீர்மானித்தேன்.

வரிசையை மீறி, நான் எப்படி தடுப்பூசியை ஏற்றிக்கொள்வேன். எனக்கு வெட்கம், அச்சம் இருக்கிறது. கொரோனா தொற்றினாலும் பரவாயில்லை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசியை நான், ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .