2025 ஜூன் 09, திங்கட்கிழமை

குருக்களை, பொலிஸூக்கு அழைத்தது சரியா: தொண்டமான் கேள்வி

George   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், திம்புள்ள பொலிஸ் நிலைத்துக்குச் சென்று பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று சனிக்கிழமை(20) பிற்பகல் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், திம்புள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

ஹட்டன்,  கொட்டகலை நகரத்தில் உள்ள இந்து ஆலயத்தின் பிராதான குருக்களுக்கு எதிராக திம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

அது குறித்து விசாரணை செய்ய குருக்களை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பல முறை பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'எந்தவொரு குருக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டாலும் அந்த குருக்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வருவது முறையல்ல' என தொண்டமான உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 'பொலிஸ் நிலைய அதிகாரிகள் குருக்களின் இடத்துக்குச் சென்று அவரிடம் விசாரணைகளை செய்திருக்க வேண்டும்' என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5