2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொழும்பில் நாளை நீர்வெட்டு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில், நாளை இரவு 10 மணியிலிருந்து தொடர்ந்து 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் முகாமைத்துவச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இது தவிர, பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகிலிருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அதனோடு தொடர்புபட்ட குறுக்கு வீதிகள் ஆகியவற்றிலும் செட்டியார்த்தெரு மற்றும் அதனோடு தொடர்புபட்ட வீதிகளிலும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .