2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கஞ்சா பண்ணை தீயிட்டு அழிப்பு

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை – பன்னல்கம பிரதேசத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ள வனப்பகுதியொன்றிலிருந்து, கஞ்சா பண்ணையொன்று கண்டுபிடிக்கப்பட்டு, தமண பொலிஸாரால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தமண ​பொலிஸாருக்கு கிடைக்க​ப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பண்ணையிலிருந்து 3,500 கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்ததாகத் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் போதைப் பொருள் ஒ​ழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க தலைமையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X