Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை – பன்னல்கம பிரதேசத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ள வனப்பகுதியொன்றிலிருந்து, கஞ்சா பண்ணையொன்று கண்டுபிடிக்கப்பட்டு, தமண பொலிஸாரால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
தமண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பண்ணையிலிருந்து 3,500 கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்ததாகத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்க தலைமையின் கீழ் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
7 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Aug 2025