Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்களால் கடவுச்சீட்டு விநியோகிக்கும் போது முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருவோரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டதன் பின்னர், போலியான அங்கிகார முத்திரைகள் வழங்கப்பட்டு வரிசையில் அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும்
சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடவுச்சீட்டு பெறுவதற்கு அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேலதிகமாக வேறு எந்த தரப்பினருக்கும் பணம் வழங்க வேண்டியதில்லை எனவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் போது செலுத்தப்படும் அங்கிகரிக்கப்பட்ட கட்டணங்களுக்கு திணைக்களத்திடம் இருந்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025