2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை திருடிய மற்றுமொருவர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதம் 13ஆம் திகதி பொல்துவ முச்சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைத் திருடிய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஓட்டோ ஒன்றிலிருந்தே குறித்த , கண்ணீர்ப்புகைக் குண்டுகள் திருடப்பட்டிருந்தன.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என வெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X