2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சித்திரம் வரைந்த ஜோடிக்கு மறியல்

Gavitha   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி புகையிரத நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ‌ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ரயில் பெட்டிகளில் வரையப்பட்ட சித்திரங்களை அழிக்க முடியாது என்றும் சித்திரம் வரையப்பட்ட பெட்டிகளுக்கு முற்றாக வர்ணப்பூச்சு பூச  வேண்டும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X