Editorial / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குள் சிறப்புப் படையணியின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் புகுந்துவிட்டன. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
“எங்களை சுடுவதற்காக வந்தீர்கள்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். எனினும், கடமையிலிருந்த பொலிஸார், அந்த மோட்டார் சைக்கிள்களை திருப்பியனுப்பினர். ஆர்ப்பாட்டக்கார்களும் ஹூ சத்தமெழுப்பினர்.
இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்த முயற்சிக்கிறார்களா? என சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டுள்ளனர்.
பாராளுமன்றத்துக்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்குள், அடையாளம் காணப்படாத மோட்டார் சைக்கிள்கள் மூன்று புகுந்துவிட்டன என, பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
52 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago