2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறைச்சாலைகள் ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை

Editorial   / 2019 மார்ச் 07 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை, குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு, அமைச்சரவை பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த தினங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந்த தனசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பதவிக்கு புதிதாக யாரை நியமிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .