Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுர்ஜித் மீட்பு பணிகள் எந்தளவுக்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 43 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த மீட்பு பணிகளை அருகே இருந்து கவனித்து வருகிறார் அமைச்சர் விஜய பாஸ்கர். இந்த நிலையில் இன்று சுர்ஜித் மீட்பு பணி குறித்து விஜய பாஸ்கர், செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
“சுர்ஜித்தை மீட்க 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. நிலத்தில் அதிர்வுகள் ஏற்படுவதை தடுக்க மிகுந்த கவனத்துடன் குழியை தோண்டி வருகிறோம்.
இதுவரை 6. 3 மீட்டர் தோண்டப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 20 அடி தோண்டியுள்ளனர். தொடர்ந்து ஒக்சிஜன் செலுத்தி வருகிறோம். நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு எதுவும் தெரியவில்லை.
ரோபோ கெமராவை உள்ளே செலுத்தி குழந்தையின் கையிலுள்ள வெப்ப அளவை பதிவு செய்துள்ளோம். கையில் வெப்பநிலை இருப்பதால் குழந்தை மயக்கத்தில் இருக்கலாம்.
மீட்பு பணிகள் எந்தளவுக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதை முதல்வர் கேட்டறிந்து வருகிறார்” என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago