2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஹக் செய்தவருக்கு பிணை

George   / 2017 ஜனவரி 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை, 10,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, இன்று உத்தரவிட்டார்.

அந்த இணையத்தளத்தில் தேசிய பாதுகாப்புத் தகவல்கள் எவையும் இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்த சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான பிரேமநாத் டொலவத்த, அதில் மக்களின் முறைப்பாடுகளே காணப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறும் கோரியதையடுத்து, பிணை வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அனுருத்த ஹர்ஷன அபேரசூரிய என்ற சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .