2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி சார்பில் ஜெனீவா செல்லும் மூவர்

Editorial   / 2019 மார்ச் 06 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, தனது பிரதிநிதிகளாக மூவரை அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) அறிவித்துள்ளார்.

இதற்கமைய, ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக வடமாகாண முதலமைச்சர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம ஆகியோர் இம்முறை ஜெனிவா செல்லவுள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பழைய வடுக்களை கிளராது, நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வதற்கு இடம்தருமாறே இவர்கள் ஜெனீவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளனர என, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X