2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Kanagaraj   / 2017 பெப்ரவரி 10 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, நாலகமுவ எனுமிடத்தில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், சிறிசெதமகவை வசிப்பிடமாகக் கொண்ட ஜானக பிரியந்த(37) என்பவர்; பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (10) பிற்பகல் 2:55க்கு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் அதே பிரதேசத்தை சேர்ந்த 43 வயதானவர், துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு காரணமென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X