Editorial / 2026 மே 13 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டசபையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பிறகு, வாக்கெடுப்பு நடைமுறைகள் தொடங்கின. "உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும்," என சபாநாயகர் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, வெளியில் சென்ற உறுப்பினர்களை அவைக்கு அழைக்கும் வகையில் மூன்று முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர், பேரவையின் நுழைவு வாயில்கள் அனைத்தையும் மூடும்படி அவைக்காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார்.
கதவுகள் மூடப்பட்டதும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் பின்வருமாறு:
வாக்கெடுப்பின் போது பிரதான எதிர்க்கட்சியான திமுக-வின் எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வாக்கெடுப்பு முடிவில் தீர்மானம் வெற்றி பெற்றதாகச் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம், 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
26 minute ago
34 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
48 minute ago
56 minute ago