2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'தாக்குதல் தொடர்பான வதந்திகளில் உண்மையில்லை'

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இவ்வாறான தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

புலனாய்வு பிரிவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். 

எனினும், பரவியுள்ள வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .