2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தாமரைக் கோபுரத்தால் கிடைத்த வருமானம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாமரை கோபுரம் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

15ஆம் திகதியன்று கோபுரம் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நிலையில், தாமரை கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக 14,000 பேர் வருகை தந்துள்ளதாக கூறினார்.

மேலும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 11 மணிவரை கோபுரத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பார்வையிடுவதற்கான காலம், சனிக்கிழமை (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இரவு 10 மணி வரை மாத்திரமே அனுமதிச் சீட்டு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .