2025 ஜூலை 09, புதன்கிழமை

தாயின் கணவரால் சிறுமி துஸ்பிரயோகம்

Janu   / 2023 ஜூலை 27 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு  உள்ளாகிய சம்பவமொன்று  கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல் கணவரின்  மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாவது கணவருடன்  குடும்பம் நடாத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் ​​​விசாரணைளை  மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

எம். றொசாந்த் 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .