2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேசிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை அனுமதிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி, நுகேகொட விஜேராம சந்தியில் இருந்து எதிர்ப்பு  ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஜேராம சந்தியில் இருந்து ஹைலெவல் வீதி ஊடாக நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கு வரை செல்லவுள்ள பேரணியின் காரணமாக விஜேராம சந்தியை அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .