2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாடு முழுவதும் 84,000 மரக்கன்றுகள் நாட்டும் நடவடிக்கை

Princiya Dixci   / 2016 மார்ச் 31 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 84 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காடு வளர்ப்பையும் மரங்கள் நாட்டுவதையும் மக்களிடம் ஊக்குவிக்கும் முகமாக ஸ்ரீ லங்கா காடு வளர்ப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மரக்கன்று நடும் நடவடிக்கை கொட்டாவ காட்டுப் பிரதேசம், சப்ரகமுவப் பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் காட்டு பிரதேசம் ஆகியவற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இரத்தினபுரி, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் https://www.facebook.com/reforestsrilanka/ என்ற முகப்புத்தகப் பக்கம் அல்லது 0772834561, 0772271270, 0773598513 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன், உங்கள் ஒத்துழைப்புக்களையும் வழங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .