Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
தேர்தலுக்கான முடிவுகளை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
7621 மொத்த பதவியிடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 4388 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அத்தோடு திமுக தலைமையிலான கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சிகளில் 132க்கும் மேலான நகராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. (J)
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago