Editorial / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில்
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வரல்ல மொரவக்க, வரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.கே.பி. சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு வந்து முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய நபர் பின்னர் சுவசெரிய ஆம்புலன்ஸில் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் வலஸ்முல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .