2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரழப்பு

Editorial   / 2020 ஜனவரி 15 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-  எலுவாங்குளம் இறால்மடுவ வாவியில் குளிப்பதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர் என்று, வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், அவரது இரு பிள்ளைகளே இவ்வாறு நீரில் மூழகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(14) பிற்பகல் 3. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .