2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நேற்று பதிவானோரின் முழு விபரம்

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 48 பேர் நேற்று (04) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், 42 பேர் கடற்படையினர் எனவும் ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவரும், பங்பளாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவரும், டுபாயிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1797 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 839 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளதுடன், மேலும் 947 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .