2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

பாம்பு தீண்டி இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2026 ஜனவரி 07 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று (06) கிளிநொச்சி - கல்மடு நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த சிறீகாந்தன் கிருசிகன் (வயது 23) என்பவரே உயிரிழந்தார்.

பாம்பு தீண்டிய இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இளைஞரின் சடலம் உடற்கூராய்வுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .