2026 மார்ச் 16, திங்கட்கிழமை

பிரபாகரனுக்கு அஞ்சி தீ வைத்தவர் கைது

Editorial   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும் அவரை தீயிட்டு கொளுத்தவே தீயை வைத்ததாகவும் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மஹரகம நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்களைக் கொண்ட கட்டிடத்தின் பாதுகாவலர், பாதுகாப்பு சாவடிக்கு தீ வைத்ததாகக் கூறி சனிக்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த (32) வயதுடைய கட்டிடத்தின் பாதுகாப்பு அதிகாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை நாள் என்பதால், ஒரு தனியார் வங்கி உட்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நபர் மட்டுமே கட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிற்பகல் 2.30 மணியளவில், பாதுகாப்பு காவலர் நிறுத்தப்பட்டிருந்த காவலர் இல்லத்தில் பிரபாகரன் தங்கியிருந்ததாகவும், அவரை கொளுத்துவதற்காக  தீ வைக்க எரியக்கூடிய திரவம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்தில் காவலர் இல்லத்தில் இருந்த ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு நாற்காலி, பல புத்தகங்கள் மற்றும் பாதுகாப்புக் காவலரின் துணிகள் மட்டுமே முற்றிலுமாக எரிந்து நாசமானதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து, கோட்டே நகரசபை  தீயணைப்புத் துறையின் பொறுப்பதிகாரி ஜி.டி.டி.பி. உட்பட எட்டு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தார்.

சந்தேக நபரை கைது செய்து விசாரித்தபோது, ​​அவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும், மயக்க நிலையில் நடந்து கொண்டதும் தெரியவந்தது. பிரபாகரன் அங்கு தங்கியிருந்ததால் தான் அந்த அறைக்கு தீ வைத்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பப்பட்டு, மருத்துவ அறிக்கையைப் பெற்று நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X