2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தில் போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து,  சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார், 8 கிளைமோர் குண்டுகள் 50 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்களை இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .