2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை ஆரம்பம்

George   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்தில்  தமிழ், முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றுக்கு மாணவர்கள் குழுவொன்று சமூகமளிக்காமை காரணமாக இந்த மோதல் எற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதலில் இனவாதம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என, பல்கலைக்கழக மாணவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X