2026 மே 04, திங்கட்கிழமை

மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் ஒருவர் பலி

Nirosh   / 2021 ஏப்ரல் 04 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை, அக்கரப்பத்தனை, ​ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு  சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ரவிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

வீடொன்றுக்காக நிர்மாண வேலைகளை ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு அவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .