2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

முதல் பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக் கொன்ற முன்னாள் கணவர்

Editorial   / 2026 ஜனவரி 11 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்​னாள் கணவர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். அவரை பொலிஸார் சுட்டு பிடித்​தனர்.

உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரைச் சேர்ந்​தவர் அனிதா சவுத்​திரி(40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வந்​தார். இவர் முகேஷ் ஜா என்​பவரை 7 ஆண்​டு​களுக்கு முன் திரு​மணம் செய்​தார்.

பின்​னர் முகேஷ் ஜாவை விட்டு அனிதா சவுத்​திரி பிரிந்து வேறு ஒரு நபரை திரு​மணம் செய்​தார். அனிதா சவுத்​திரிக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இரவு நேரத்​தில் அவர் ஆட்டோ ஓட்டி தனது குடும்​பத்​தினருக்கு உதவி வந்​தார். ரயில்வே நிலை​யத்​திலிருந்து பயணி​களை அழைத்து செல்​வதை அவர் வழக்​க​மாக மேற்​கொண்டு வந்​தார்.

இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ரயில் நிலை​யம் அருகே துப்​பாக்​கியால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அவரை முன்​னாள் கணவர் முகேஷ் ஜா கொலை செய்​திருக்​கலாம் என அனி​தா​வின் கணவர் மற்​றும் அனி​தா​வின் சகோ​தரி வினிதா ஆகி யோர்  பொலிஸாரிடம் புகார் தெரி​வித்​தனர்.

இதனடிப்​படை​யில் முகேஷ் ஜாவின் நண்​பர்​கள் மனோஜ் ஜா மற்​றும் சிவம் ஜா ஆகியோரை பொலிஸார் கைது செய்​தனர். தலைமறை​வான முகேஷ் ஜாவை போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில் அவரது கார் பெத்வா நதி​யின் நாட்​காட் பாலம் அருகே நின்​றிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் பகவான்​புத்ரா மற்​றும் கர்​கான் சாலை​யில் முகேஷ் ஜா சென்று கொண்​டிருப்​பதை பொலிஸார் பார்த்​தனர்.

அவரை நிறுத்த முயன்​ற​போது, முகேஷ் ஜா, பொலிஸார் மீது தனது கைத்​துப்​பாக்​கி​யால் சுட்​டார். இதையடுத்து போலீ​ஸார் நடத்​திய பதில் தாக்​குதலில் முகேஷ் ஜாவின் காலில் குண்டு பாய்ந்​தது. அவரை சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனையில் பொலிஸார் சேர்த்​துள்​ளனர். அவரிட​மிருந்து துப்​பாக்கி மற்​றும் குண்​டு​களை பொலிஸார் பறி​முதல் செய்​தனர். ‘‘அனிதா சவுத்​திரி தன்​னை​விட்டு பிரிந்து சென்​றதை  தாங்கி கொள்ள முடிய​வில்​லை. என்னை அவர் ஏமாற்​றிய​தால், அனி​தாவை சுட்​டுக்​ கொன்​றேன்’’ என பொலிஸாரிடம்​ முகேஷ் ஜா கூறி​னார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .