Freelancer / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவருக்குப் பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்றுக் காணப்படுகின்றன.
நேற்று முற்பகல் 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழியினுள் மின் இணைப்புக்காக வயரைச் செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர். (a)
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
4 hours ago