Editorial / 2020 ஜூலை 16 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கம் இதனை அறிவுறுத்தியுள்ளது.
குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர தெரிவித்துள்ளார்.
இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுமாறும், பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் சளியை வௌியேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வெவ்வேறு நோய் நிலைமைகளினால் அவதியுறும் நோயாளர்களும் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுவது உயிர் ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .