Editorial / 2022 ஜூன் 06 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-15 முகத்துவாரம் ரெட்பாணா வத்தை எனுமிடத்தில் சற்றுமுன்னர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களே, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 24 வயதான வினோதன் என்பவரே காயமடைந்துள்ளார். அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பிந்தி கிடைத்த தகவல்களின் பிரகாரம் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் குறுகிய சில நாட்களாக ஆங்காங்கே துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முகத்துவாரத்தில் இடம்பெற்றது 5 ஆவது துப்பாக்கிப் பிரயோக சம்பவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago