2025 மே 22, வியாழக்கிழமை

முக்கிய ரயில் பாதை மூடப்படுகின்றது

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளூமெண்டல் ரயில் கடவை புதுப்பித்தல் பணிகளுக்காக நாளை (01) குறித்த பாதை முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் வீதியில் உள்ள ப்ளூமெண்டல் ரயில் கடவையில் அவசர புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதன்படி, நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பிரதான வீதி மூடப்படும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு இலங்கை ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X