2024 மே 17, வெள்ளிக்கிழமை

மைதானத்தில் உயிரை விட்ட கிரிக்கெட் வீரர்

Mithuna   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியைச் நேர்ந்த பொறியியலாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நொய்டா பொறியியலாளர் விகாஸ் நேகி என்பவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவராவார். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார்.

இந் நிலையில் நொய்டா பகுதியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர், ஓட்டங்களை எடுக்க முற்பட்டபோது, சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் விழுந்ததை கண்ட சக வீரர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பொறியியலாளர் மாரடைப்பால் மைதானத்தில் விழுந்து இறந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Death due to heart attack in Noida: One run took the life of a batsman Vikas Negi (36)
- Engineer fell on the pitch while playing cricket.
pic.twitter.com/QptWuFFV2w

— زماں (@Delhiite_) January 9, 2024 ">http://

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .