2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில் சேவைகளில் தாமதம்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமிக்ஞை செயலிழந்துள்ள காரணத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பிரதான ரயில் பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட பல்வேறு ரயில்கள் கொழும்பு கோட்டைக்கு பயணிக்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் ஊழியர்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (19) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

எதிர்வரும் நாட்களில் தொடர்சியான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள, சாரதிகள், நிலைய கட்டுப்பாட்டளர்கள் மற்றும் ரயில் பரிசோதனை முகாமையாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .