Freelancer / 2021 நவம்பர் 21 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
களை கொல்லிகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை மீண்டும் இறக்குமதி செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்தார்.
நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரவுள்ளதாக தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தை ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால், மூன்று பருவங்களில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், முதல் மற்றும் இரண்டாவது பருவங்களுக்கு களை கொல்லிகள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
11 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 Mar 2026
20 Mar 2026