2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ரூ.70 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம – தர்கா நகரில் – பதிராஜ​கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கேரளா கஞ்சா 30 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கேரளா கஞ்சாவின் பெறுமதி 70 இலட்சம் ரூபாயெனத் தெரிவித்த பொலிஸார், இவை புத்தளம் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்டு களுத்துரையிலுள்ள வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X