2025 ஜூலை 09, புதன்கிழமை

'வதந்திகள் பரப்பப்படுகின்றன'

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், நாளைய நாடாளுமன்ற அமர்வில் தாம் பங்கேற்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடைவிதிப்பையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜாநாமா செய்துவிட்டதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலளிக்ககும் வகையிலேயே, நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது டுவிட்டர் பக்கதில் பதிவொன்றை இட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .