2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாடகைக்கு வீடு வழங்கியவர் கைது

J.A. George   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் கடந்த 2ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேக நபருக்கு வாடகைக்கு வீடு வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹிம்புட்டான பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து சுமார் 07 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட  முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X