Editorial / 2026 மே 03 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் தனது மனைவி விவாகரத்து கோரியதால் ஏற்பட்ட கோபத்தில், அவரது வீட்டிலிருந்த தென்னை மரங்களைக் கணவன் வெட்டி வீழ்த்தியுள்ளார்.
மூன்று பெண் பிள்ளைகளின் தாயான இப்பெண், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மனைவி மீதான கோபத்தில் கணவன் இச்செயலைச் செய்துள்ளார்.
இச்சம்பவம் வௌ்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“இரவு வேளையில் திருட்டுத்தனமாகக் காணிக்குள் புகுந்த எனது கணவர், மரம் வெட்டும் இயந்திரம் மூலம் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார். காய்க்கும் நிலையில் இருந்து, எனது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த மரங்களையே அவர் இவ்வாறு அழித்துள்ளார்.”எனக் கவலை தெரிவித்தார்.
சில தென்னை மரங்கள் முழுமையாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதோடு, மேலும் சில மரங்கள் பாதியளவு வெட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளன. பலமான காற்று வீசும் போது அவை சரிந்து வீழக்கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.





9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026