2026 மே 04, திங்கட்கிழமை

வெளிநாடுகளில் இருந்து திருப்பியனுப்பட்ட 24 பேர்

J.A. George   / 2021 மார்ச் 31 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர்.

குடிவரவு - குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாடுகளில் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனில் இருந்து 20 பேரும் சுவிட்சர்லாந்தில் இருந்து 04 பேரும் இவ்வாறு திருப்பியனுப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் அனுப்பி வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், பின்னர் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, குடிவரவு - குடியகழ்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .