2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வௌ்ளிக்கிழமைகளிலே​யே அதிகம் விபத்துக்கள் இடம்பெறுகின்றன

ஆர்.மகேஸ்வரி   / 2019 மார்ச் 10 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுவாக நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களானது அதிகமாக வௌ்ளிக்கிழமை கிழமைகளிலேயே இடம்பெறுவதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறித்த விபத்துக்கள் வௌ்ளிக்கிழமைகளில் மாலை 4 மணித்தொடக்கம் 8 மணி வரையான நேரத்திற்குள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்

அத்துடன் கடந்தாண்டு இடம்பெற்ற 35,000 விபத்துக்களை மய்யமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, 20 தொடக்கம் 40 வயதுக்கு இடைப்பட்ட சாரதிகளே இந்த விபத்துக்கு காரணமாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X