2026 மார்ச் 16, திங்கட்கிழமை

‘ஸ்கை ஸ்டிக்’ வெடிக்காமையால் மூவர் காயம்

Editorial   / 2025 ஜனவரி 20 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு மேலே உயரமாகப் பறந்து கொண்டிருந்த பறவைக் கூட்டத்தின் மீது சுடப்பட்ட ஸ்கை ஸ்டிக் வகை வெடிபொருள் வெடிக்கத் தவறி, அதிகாரிகள் பயணித்த வாகனத்தின் மீது விழுந்ததால், திங்கட்கிழமை (20) மதியம் விமான நிலையத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

பறவை ஆபத்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விலங்கு மற்றும் பறவை ஆபத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு, திங்கட்கிழமை (20) பகல்  11.45 மணியளவில் விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே வானத்தில் பறவைகள் கூட்டம் பறந்து வருவதாகவும், இதனால் விமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

 அதன்படி, மூன்று அதிகாரிகள் வாகனத்தில் ஓடுபாதைக்குச் சென்று, பறவைக் கூட்டத்தை பயமுறுத்துவதற்காக ஸ்கை ஸ்டிக் போன்ற வெடிபொருட்களைக் கொண்ட துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்.  அந்த குண்டு வெடிக்காமல், அதிகாரிகள் பயணித்த வாகனத்தின்  மீதே விழுந்தது.

 அதற்குள், வாகனத்தில் இதுபோன்ற பல ஸ்கை ஸ்டிக் போன்ற வெடிபொருட்களைஇருந்தன, அவை ஒரே நேரத்தில் வெடித்து, திடீரென தீப்பிடித்தன.

 அதே நேரத்தில், கட்டுநாயக்க விமான நிலைய தீயணைப்புத் துறையின் அதிகாரிகள் தீயை அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

 இந்த சம்பவத்தின் விளைவாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் விலங்கு மற்றும் பறவை ஆபத்து கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் காயமடைந்து நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அதிகாரிகள் பயணித்த கெப் வண்டியும் சேதமடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X