2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹரிஸ்பத்துவையில் பஸ் விபத்து : ஒருவர் மரணம் 53 பேர் காயம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாஊவா, ஹரிஸ்பத்துவ, பெரியமுடக்கு பகுதியில், இன்று (24) இரவு, தனியார் பஸ் ஒன்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,53 பேர் படுகாமடைந்துள்ளனர்.

அம்பாறையில் இருந்து, வலப்பனை வீதி வழியாக நுவரெலியாவுக்குச் சுற்றுலாவுக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றே, இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்த வலப்பனை பொலிஸார், இந்த பஸ்ஸில் 54 பேர் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள், ரிகலகஸ்கட, வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 04 பேர் மேலதிக சிசிக்கைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X