2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கி.மா. தவிசாளரின் மகள் பயணித்த வாகனம் விபத்து; 7 பேர் காயம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதியின் மகள் பயணித்த வாகனம், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் புதன்கிழமை (10) விபத்துக்குள்ளானதால், இதில் காயமடைந்த 07 பேர் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - கண்டி வீதியில், கந்தளாய் மத்திய கல்லூரிக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

வீதியில் குறுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், மேற்படி வாகனத்தின் நிறுத்தியை (பிறேக்) செயற்படுத்தியபோது, வாகனம் வீதியிலிருந்த இரண்டு மின்கம்பங்களுடன் மோதி அருகிலிருந்த வீட்டுடன் மோதியது. இதன்போது, மேற்படி   வீட்டுச்சுவரும் சேதமடைந்தது.

கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதியின் இணைப்புச் செயலாளரான மகள் இஸ்சானா ஆரியவதி, தேர்தல் பணிக்காக சேருநுவர நோக்கிச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றது.

காயமடைந்தவர்களில் கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதியின் மகளும் அடங்குகின்றார்.

இந்த விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .