2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மூதூரில் 13 வியாபார நிலையங்கள் உடைப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


மூதூர் பிரதான வீதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 13 வியாபார நிலையங்கள் இனந்தெரியாதவர்களினால் உடைத்து தேசமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை  அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த வியாபார நிலையங்களின் கூரைகளை உடைத்து உள்நுழைந்து பின்வழியால் சென்றுள்ள குறித்த நபர்கள் உடைமைகள் எவற்றையும் திருடவில்லை என வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேசத்தில் பிரச்சினையொன்றை ஏற்படுத்தும் நோக்கில் இயங்கும் சில தீய சக்திகளின் வேலையாக இது இருக்கும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை கடை உடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் தலைமையில் முக்கியஸ்தர்களின் அவசர கூட்டமொன்று மூதூர் பிரதேச சபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், மூதுர் மஜ்லிஸ் ஷுறா உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மூதூர் பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட  பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த குற்றச் செயலில்  ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மூதூர் பொலிஸார் சகல முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் இனிவரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, மூதூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பதெனவும் எதிர்காலத்தில்   வாராந்த சந்தை இடம்பெறும் இடங்களில் மாத்திரம் நடைபாதை வியாபரிகளை அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.






You May Also Like

  Comments - 0

  • lahir Sunday, 25 August 2013 10:23 AM

    முஸ்லிம்களுக்கு இப்போ இடம் இல்லை. முஸ்லிம்கள் நசுக்கப்படுகிறார்கள். முஸ்லிம் மினிஸ்டர்கள் தூக்கம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .