2025 ஜூன் 25, புதன்கிழமை

புனித மரியாள் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவு நிகழ்வு

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன், எஸ்.சசிக்குமார்


திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட வீதி நடைபவனி இன்று சனிக்கிழமை (13) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, திருகோணமலை லயன்ஸ் கழகத்தினர் அநுசரணை வழங்கியதுடன் நடைபவணியிலும் கலந்து கொண்டனர்.

மேலும், புனித மரியாள் கல்லூரியின் 150 ஆவது வருட நிறைவையொட்டி, கல்லூரியில் வெள்ளிக்கிழமை (12) விஷேட நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் பிரதம அதிதியாகவும், இலங்கை பாகிஸ்தான் மாகாண  மெற்றியாரியார் அருட்சகோதரி சுனிற்றா, திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், இத்தினத்தையெட்டி தபால் திணக்களத்தினால் விசேட முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. விசேட மலரும் வெளியிடப்பட்டது.

கல்லூரி பழைய மாணவனும் (1938,1939 வருடம்), திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் இந்நிகழ்வில் பங்கு கொண்டிருந்தார்.

இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆரம்பகாலங்களில் சேவையாற்றிய அதிபர்கள்  பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய மட்டத்தில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு விருதுகளும் இதன்போது கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கல்லூரி, ரோமன் கத்தோலிக்க மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்டு அப்போஸ்தலிக்க கார்மல் சபை என்ற கன்னியர் சபையினால் ஆரம்ப காலம் முதல் இன்று வரை நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

1960ம் ஆண்டில் மிஷனரி பாடசாலைகள், அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுசெல்லப்பட்டபோதும் இன்று வரை அப்போஸ்தலிக்க கார்மல் சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளே கல்லூரியின் அதிபர்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .