2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

5 மாணவர் படுகொலை; விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 12 அதிகாரிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை, எதிர்வரும் ஒகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் நேற்று திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் ஏ.எல்.அஸ்ஹர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வழக்கின் 12ஆவது பிரதிவாதியாக குறிப்பட்ப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை உயர் அதிகாரி மட்டக்களப்பு நீதிமன்றில் நடைபெறும் வழக்கு ஒன்றில் பிரசன்னமாகிய படியால் அவர் நேற்று மன்றில் சமூகமளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

அத்துடன் 10ஆவது சந்தேக நபருக்கு பிறந்துள்ள குழந்தையின் பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிணை கோரியிருந்தார். எனினும் இதற்கு அரச தரப்பு சட்டத்தரணி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதனால் சிறைச்சாலை ஆணையாளரின் ஆலோசனையினை பெற்று மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உதவி பொலிஸ் அதிகாரி உட்பட 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த மாணவர் ஒருவருமே 2006 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .