Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
இந்தியாவின் அந்தமான்தீவைச் சேர்ந்த 6 மீனவர்களுடன் படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக திருகோணமலை, குச்சவெளிக் கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன் பிடித்துக்கொண்டிருந்த இம்மீனவர்களின் படகு இயந்திரம்; திடீரென செயலிழந்தமை காரணமாக காற்றினால் அடித்துவரப்பட்டு குச்சவெளிக் கடற்கரையில் கரையொதுங்கியது.
6 மீனவர்களும் தற்போது குச்சவெளி புடவைக்கட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இயந்திரத்தை திருத்தியதும், அவர்கள் அந்தமான் தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jun 2025
20 Jun 2025
20 Jun 2025