2025 மே 16, வெள்ளிக்கிழமை

2 கடவுச்சீட்டுகளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

திருகோணமலை, நிலாவெளியில் 2 கடவுச்சீட்டுகளையும் வெளிநாடு செல்வதற்கான 2  பயணச் சீட்டுகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 31 வயதுடைய ஒருவரை இம்மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல், ஞாயிற்றுக்கிழமை (5) உத்தரவிட்டார்.           

குச்சவெளி, நிலாவெளிப் பகுதிகளில்; வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பெண்களிடம் கடவுச்சீட்டுகள் மற்றும் தகவல்களை இச்சந்தேக நபர் சேகரித்தமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பில் விசாரணை செய்து சந்தேக நபரை  சனிக்கிழமை (4) கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .