Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, நிலாவெளியில் 2 கடவுச்சீட்டுகளையும் வெளிநாடு செல்வதற்கான 2 பயணச் சீட்டுகளையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 31 வயதுடைய ஒருவரை இம்மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல், ஞாயிற்றுக்கிழமை (5) உத்தரவிட்டார்.
குச்சவெளி, நிலாவெளிப் பகுதிகளில்; வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பெண்களிடம் கடவுச்சீட்டுகள் மற்றும் தகவல்களை இச்சந்தேக நபர் சேகரித்தமை தொடர்பில் தமக்குத் தகவல் கிடைத்தது.
இது தொடர்பில் விசாரணை செய்து சந்தேக நபரை சனிக்கிழமை (4) கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago